100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
பெங்களூர்: "கொஞ்ச நாளைக்காவது நீங்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாக வேண்டும்" என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை நேரில் அழைத்து பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் 15 சட்டசபைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

பெங்களூரை பொருத்தளவில், கே.ஆர்.புரம், சிவாஜி நகர், யஸ்வந்த்பூர் மற்றும் மகாலட்சுமி லேஅவுட், ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேஆர்.புரம், தொகுதி, பெங்களூர் காவல்துறையின் கிழக்கு மண்டல கட்டுப்பாட்டில் வருகிறது.
கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, இந்த மண்டலத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை நேரில் வர வைத்துள்ளார். இடைத்தேர்தலை முன்னிட்டு எந்த ஒரு சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்து அனுப்பி உள்ளார்.
அதேபோல, வடக்கு மண்டலத்திலுள்ள, யஸ்வந்த்பூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, பெங்களூரு தெற்கு மண்டல காவல்துறை தலகாட்புரா தொகுதியில் ரவுடிகளின் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் கேஆர்புரம் தொகுதிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர், பானசவாடி, கேஜி ஹள்ளி, டிஜி ஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரவுடி பட்டியலில் உள்ளோரின் வீடுகளுக்கு காவல்துறையினர் அதிகாலையில் சென்று அங்கு பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடத்தினர். தேர்தலையொட்டி இந்த தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications