குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது எடியூரப்பா அரசு!
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து 4-ஆவது முறையாக முதல்வர் எடியூரப்பா பதவியேற்றார். எனினும் அவர் 31-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டுள்ளார்.

17 பேர் தகுதிநீக்கம்
இந்த நிலையில் எடியூரப்பாவோ இன்றைய தினமே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் நேற்று வரை 17 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.

சுயேச்சை
இந்த நிலையில் சட்டசபையின் பலம் 207 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மைக்கு தேவை 103 அல்லது 104 ஆகும். இந்த நிலையில் எடியூரப்பா அரசுக்கு 105 பாஜக எம்எல்ஏக்களும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் என மொத்தம் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
எனவே பெரும்பான்மை பலத்தை காட்டிலும் கூடுதலாக ஓரிரு இடங்களை பாஜக வைத்துள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் கூட்டம் தொடங்கியதும் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.

14 மாதங்களில்
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதன் மூலம் ஆளுநர் உத்தரவின் பேரில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார். கடந்த 14 மாதங்களில் கர்நாடக சட்டசபை 3-ஆவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications