கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய அனுமதி.. கல்வி துறை அமைச்சர் சுதாகர் முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் சுதாகர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது. கடந்தாண்டு ஜனவரியில் உடுப்பியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுக்க பரவியது. இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு பக்கம் இருக்க அங்குள்ள மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குச் செல்ல தொடங்கினர்.
இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இறுதியில் மாணவிகள் உரிய யூனிபார்ம் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு விளக்கம் அறிவித்தது.
இப்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவிகள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் குறித்து தற்போதைய கர்நாடக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர் சுதாகர், "ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.. இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்" என்று அவர் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications