பாஜக போலி வாக்குறுதி.. மணிப்பூர் நிலையை பாருங்க.. கர்நாடக வாக்காளர்களை எச்சரித்த ப.சிதம்பரம்
பெங்களூர்: மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். இரண்டு என்ஜின்களுமே தோல்வி அடைந்து விட்டன என்றும், கர்நாடக வாக்காளர்கள் போலி வாக்குறுதிகளை கண்டு ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் 'மெய்தி' என மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், அவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வெடித்த இந்த வன்முறை காரணமாக 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவமும் அசாம் ரைஃபிள் படை பிரிவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், இரட்டை என்ஜின் அரசாங்கம் என பாஜக கூறி வரும் போலி வாக்குறுதிகளைக் கண்டு மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். இரண்டு என்ஜின்களுமே தோல்வி அடைந்து விட்டன. மாநிலத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் மாநில அரசு உடைந்து விட்டது.
மத்திய அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் பொறுப்பற்ற தீர்வுகளை கையாள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றுமையாக பயணித்த சமூகங்கள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கர்நாடக வாக்காளர்கள் போலியான 'இரட்டை என்ஜின் அரசு' வாக்குறுதி குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

மத்தியிலும் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதை குறிக்கும் வகையில் பாஜக இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் என்ற வார்த்தையை பாஜக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய கோஷமாக இரட்டை என்ஜின் அரசாங்கம் வேண்டும் என்றால் அப்போதுதான் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் சிதம்பரம், இரட்டை என்ஜின் என்பதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 113 இடங்களுக்கு மேல் வென்றால்தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications