‛‛நெற்றி நிறைய விபூதி’’.. மொத்தமாக ஆளே மாறிய ராகுல்! கர்நாடகா தேர்தலில் கவனம் பெற்ற நிகழ்வு.. அடடே!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ராகுல் காந்தி கர்நாடகா சென்றார். பாஜகவின் ஓட்டு வங்கியாக லிங்காயத் சமுதாயம் உள்ள நிலையில் பாகல்கோட்டையில் நடந்த பசவ ஜெயந்தி விழாவில் ராகுல் காந்தி நெற்றி நிறைய விபூதி அணிந்து முற்றிலுமாக வித்தியாசமாக காட்சியளித்து கவனம் ஈர்த்தார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. மாறாக கர்நாடகாவில் மட்டும் பாஜக செல்வாக்குடன் திகழ்கிறது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது.

மே மாதம் 24ம் தேதியுடன் கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது வேட்புமனு தாக்கல் மற்றம் பரிசீலனை நிறைவு பெற்றுள்ளது. நாளை வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதையடுத்து நாளை மாலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது. இதற்கிடையே ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் முதற்கட்ட பிரசாரத்தை முடித்த ராகுல் காந்தி இன்று 2வது கட்டமாக 2 நாள் பயணமாக கர்நாடகா சென்றார். தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கிய ராகுல் காந்திக்கு கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பாகல்கோட்டை சென்றார். அங்கு லிங்காயத் சமுதாயத்தின் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.
இந்த வேளையில் ராகுல் காந்தி நெற்றி நிறைய திருநீர் பூசி இருந்தார். அதாவது பக்தியை வெளிக்காட்டும் வகையில் அவர் திருநீர் பட்டை அணிந்திருந்து விழா மேடைக்கு நடந்து சென்று அமர்ந்தார். அதன்பிறகு விழா மேடையில் அமர்ந்த ராகுல் காந்தி லிங்காயத் மடாதிபதிகளிடம் பேசினார். மேலும் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு மடாதிபதிகள் சார்பில் பசவண்ணர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ராகுல் காந்தி நெற்றி நிறைய பக்தியுடன் திருநீர் அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் லிங்காயத்துகள் தான் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி இந்த விழாவில் பங்கேற்று நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த முறை லிங்காயத் ஓட்டுகளை கவர காங்கிரஸ் பல்வேறு செயல்களை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் ராகுல் காந்தியும் பசவ ஜெயந்தி விழாவில் பங்கேற்றதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications