பலிகடா.. சித்தராமையாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்ட பாஜக அமைச்சர் 2 தொகுதிகளிலும் படுதோல்வி
பெங்களூர்: கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான சித்தராமையாவை வீழ்த்துவேன் என முஷ்டி முறுக்கி சொந்த தொகுதியை விட்டு வெளியேறி வருணா, சாம்ராஜ்நகரில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் தோல்வியடைந்தார். சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர் புட்டரங்க செட்டி ஆகியோர் சரியாக ஸ்கெட்ச் போட்டு சோமண்ணாவை வீழ்த்தி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013 தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த தேர்தலில் மகன் யதீந்திராவுக்காக தொகுதியை விட்டு கொடுத்தார். இதையடுத்து யதீந்திரா வெற்றி பெற்றார்.

மாறாக கடந்த தேர்தலில் சித்தராமையா தொகுதி மாறி 2 இடங்களில் போட்டியிட்டார். மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வியடைந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.
இந்த தேர்தலில் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வென்றால் முதல்வர் பதவியை பெறும் நோக்கத்தில் அவர் சொந்த தொகுதிக்கு திரும்பினார். தந்தைக்காக மகன் யதீந்திரா தொகுதியை தியாகம் செய்தார். சித்தராமையாவை தோற்கடிக்க பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.
ஆனால் இதற்கு எடியூரப்பா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா வருணாவில் பாஜக சார்பில் போட்டியிட்டார். மேலும் அவருக்கு சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. சோமண்ணா பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலையில் அதனை விட்டுவிட்டு வெளிமாவட்டங்களில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
மேலும் சித்தராமையாவை வீழ்த்துவாக அவர் முஷ்டி முறுக்கி பிரசாரம் செய்தார். இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருணா, சாம்ராஜ் நகர் என 2 தொகுதிகளிலும் சோமண்ணா தோல்வியடைந்துள்ளார். வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். சாம்ராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டி வெற்றி பெற்றுள்ளார். புட்டரங்க செட்டி என்பவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
சோமண்ணா தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் சேரவில்லை. மேலும் பாஜக தலைவர்களுடன் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தான் சோமண்ணாவுக்கு சொந்த தொகுதியை விட்டு வெளிமாவட்டங்களில் 2 தொகுதிகளை பாஜக மேலிடம் வழங்கியது. இதன்மூலம் சோமண்ணா தற்போது பலிகடாவாகி உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications