ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்! அண்ணாமலையை மாட்டிவிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிலை இதுதான்.. பரிதாபம்
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டுக்கட்டாக ஹெலிகாப்டரில் பணம் எடுத்து சென்றதாக பரபரப்பான புகார் அளித்து சிக்கலில் சிக்கவைத்த காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொரகே பரிதாபமாக தோற்றார். அவரை பாஜக வேட்பாளரை வீழ்த்தினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களின் விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்நிலையில் தான் கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக செயல்பட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடுப்பி மாவட்டத்துக்கு பிரசாரம் சென்றபோது ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றதாக பரபரப்பான புகார் அளித்த காங்கிரஸ் வேட்பாளரின் நிலை என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது தேர்தல் பிரசாரத்தின்போது அதாவது கடந்த மாதம் 17 ம் தேதி அண்ணாமலை உடுப்பி சென்றார். ஹெலிகாப்டரில் அவர் பயணித்தார். அப்போது அண்ணாமலை வைத்திருந்த பேக்கில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய்குமார் சொரகே தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை முழுவதுமாக மறுத்தார். மேலும் தேர்தல் ஆணையம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அண்ணாமலை கொண்டு சென்ற பேக்குகளில் ஆடைகள் மட்டுமே இருந்தன. பணம் இல்லை. அவரது ஹெலிகாப்டர், பேக்குகள் சோதனை செய்யப்பட்டன என விளக்கம் அளித்தது. இருப்பினும் வினய் குமார் செரகேவின் இந்த புகார் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் அண்ணாமலை மீது பரபரப்பான புகார் கூறிய வினய் குமார் சொரகே காங்கிரஸ் கட்சி சார்பில் உடுப்பி மாவட்டம் காபு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இன்றைய தேர்தல் முடிவில் அவர் தோல்வியடைந்தார். காபு தொகுதியில் வினய் குமார் சொரகே 67,555 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து பாஜகவில் போட்டியிட்ட குர்மி சுரேஷ் செட்டி 80,559 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வினய் குமார் சொரகே தோல்வியடைந்தார்.
முன்னதாக தபால் ஓட்டு எண்ணிக்கையில் இருந்தே வினய் குமார் சொரகே பின்தங்கி இரந்தார். இறுதியில் அவர் தோல்வியையும் தழுவினார். உடுப்பி என்பது கர்நாடகாவில் கடலோர மாவட்டமாகும். இங்கு பாஜக செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இந்நிலையில் தான் வினய் குமார் சொரகே தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications