பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜான்சன் மர்ம மரணம்! 4-வது மாடியில் இருந்து விழுந்தது எப்படி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜூட் ஜான்சன் (வயது 52). பெங்களூர் கொத்தனூர் கனகஶ்ரீ லே அவுட் எஸ்எல்வி பாரடைஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஜான்சன் வசித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் 1996-ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார் ஜான்சன். 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் ஜான்சன். மொத்தம் 39 முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 125 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை முற்பகலில் ஜான்சன் தமது அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார் ஜான்சன். மருத்துவமனைக்கு ஜான்சன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது மாடியின் பால்கனியில் இருந்து ஜான்சன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 4-வது மாடியில் இருந்து தவறிதான் கீழே விழுந்து ஜான்சன் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்காக 4-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜான்சன் மரணத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications