இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர்
பெங்களூரு: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார்.
இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார். லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது.
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார். ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்.
மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications