கர்நாடகாவில் ஷாக்! நந்தினி பால், தயிர் விலை கிடுகிடு உயர்வு! இன்று முதல் எவ்வளவு? இதோ முழு லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நந்தினி நிறுவனத்தின் பால், தயிர், பட்டர் மில்க் உள்ளிட்டவற்றின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போல் கர்நாடகாவில் நந்தினி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகா பால் கூட்டமைப்பு சார்பில் ‛நந்தினி' என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகா அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
நந்தினி நிறுவனம் சார்பில் பால், தயிர், நெய், பட்டர், ஐஸ் கிரீம், சாக்லேட்டுகள், இனிப்புகள் உள்ளிட்டவை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிறுவனம் என்பதால் மாநிலம் முழுவதும் ‛நந்தினி' தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் சமீபகாலமாக நந்தினி பால் உள்பட அதன் பிற பொருட்களின் விலைகள் உயரும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து முந்தைய பாஜக அரசு விலை ஏற்றத்தை தள்ளிவைத்தது. இருப்பினும் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நந்தினி பால் விலையை அதிகரிக்க முடிவு செய்தது. அதன்படி நந்தினி பால், நந்தினி தயிர் பாக்கெட்டுகளின் விலை ரூ.3 வரை உயர்த்தவும், பட்டர்மில்க்கின் விலை ரூ. 1 வரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது இன்று முதல் கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வின் விபரம் வருமாறு:
இந்த விலை உயர்வு அனைத்து வகை பால் பாக்கெட்டுகளிலும் எதிரொலிக்கிறது. அதன்படி ஒரு லிட்டர் Toned Milk (நீலநிற பாக்கெட்) ரூ.39ல் இருந்து ரூ.42க்கும், Homogenised Toned Milk ரூ.40ல் இருந்து ரூ.43க்கும், பசும்பால் (பச்சை பாக்கெட்) ரூ.43ல் இருந்து ரூ.46க்கும், சுபம் ஸ்பெஷல் மில்க் (ஆரஞ்ச் பாக்கெட்) ரூ.45ல் இருந்து ரூ48க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர அரைலிட்டர் சாதாரண பால் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ.20க்கு விற்பனையான சாதாரண பால் இன்று முதல் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் தயிர் ஒரு கிலோ ரூ.47 ல் இருந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் பட்டர் மில்க் (200 மில்லி லிட்டர் பாக்கெட்) ரூ.8 ல் இருந்து ரூ.9 ஆக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசின் நந்தினி பால் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஷாக்காகி உள்ளனர். இந்த பால் பாக்கெட்டுகள் கர்நாடகா மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த விலை உயர்வு அண்டை மாநில மக்களையும் பாதித்துள்ளது என்பது குறுிப்பிடத்தக்கது.
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications