கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. பாஜகவுக்கு “ஆபத்து”? இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 72.67% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 2018ல் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதிக சீட்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

வாக்குப்பதிவு நிறைவு : கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர். 58,545 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மெதுவாக தொடங்கி விறுவிறு: காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல் 1 மணிவரை 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பகல் 3 மணி வரையில் 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி வரை 65.69% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் இரவு 11 மணி நிலவரப்படி 72.67% வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதியான புள்ளி விவரம் நாளை காலை தெரியவரும் என்றாலும், இந்த வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாதது எனத் தெரியவந்துள்ளது.
அதிகபட்ச வாக்குப்பதிவு : 2018 சட்டமன்றத் தேர்தலில் 72.36% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் முந்தைய சாதனையை தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு முறியடித்துள்ளது. முன்னதாக 2013 சட்டமன்றத் தேர்தலில் 71.45 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.
மாண்டியாவில் உள்ள மேலுகோட் சட்டமன்றத் தொகுதியில் 90.93% வாக்குகள் பதிவான நிலையில், பெங்களூருவில் உள்ள சிவி ராமன் நகர் தொகுதியில் 47.43% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் முறையே 62 சதவீதம் மற்றும் 57 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சிக்கு சிக்கல்? : 2018ல் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றபோது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக 104 சீட்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 89 சீட்கள், ஜேடிஎஸ் கட்சி 37 சீட்களைக் கைப்பற்றியது. இப்போது அதைவிட அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறப்பட்டிருப்பதால், அதிக வாக்குப்பதிவு சதவீதம் லாஜிக் இந்த முறையும் வொர்க் அவுட் ஆகுமா என்பதை மே 13ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications