மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு காங்கிரஸ் குடைச்சல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோருகிறது!
பெங்களூர்: மத்திய இணை அமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமிக்கு எதிரான கனிம நிறுவன நில முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரியுள்ளது. கர்நாடகா மாநில எஸ்ஐடி போலீசார். மூடா நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் குமாரசாமிக்கு எதிராக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கிறது என்பது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குற்றச்சாட்டு.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மனைவிக்கு மூடா எனும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தார். இந்த அனுமதிக்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் திடீரென மத்திய இணை அமைச்சரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமிக்கு எதிரான கனிம நில முறைகேட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். குமாரசாமிக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு முன்னர் புயலை கிளப்பியதுதான் இந்த வழக்கு.
2006-2007-ம் ஆண்டு கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவி வகித்த காலத்தில், வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்துக்கு கனிம வள தொழில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் 550 ஏக்கர் நிலமும் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில்தான் முறைகேடு என்பது வழக்கு. இது தொடர்பான வழக்கை கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு - சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திடீரென சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரி இருக்கிறது கர்நாடகா சிஐடி போலீஸ். குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 10 மாதங்களுக்கு முன்னரே அனுமதி கேட்டும் ஆளுநர் தாமதப்படுத்தி வந்தார்; சித்தராமையா வழக்கில் உடனே அனுமதி கொடுத்த ஆளுநர் இப்போது என்ன செய்யப் போகிறார் என்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications