பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் 3 பெண்கள் புகார் அளிக்க 'ரெடி'.. அம்மா பவானியையும் விசாரிக்கிறது சிஐடி!
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கி எடுத்த 300 பெண்களை நாசமாக்கிய எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் 3 பெண்கள் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவின் இந்த நாசகார செயல் தொடர்பாக தாயார் பவானி ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவின் ஹாச தொகுதி சிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். வீட்டில் பணிபுரிந்த பெண்கள், வேலை கேட்டு வந்தவர்கள், உதவி கேட்டு வந்தவர்கள் என பல பெண்களை துப்பாக்கி முனையிலும் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார் பிரஜ்வல் ரேவண்ணா. அத்துடன் அவர்களை ஆபாசமாகவும் வீடியோக்கள் எடுத்திருந்தார். இந்த 3,000 வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவையே அதிரவைத்திருக்கின்றன.

இந்த நிலையில் பிரஜ்வலை தப்ப வைக்க, புகார் கொடுத்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக தந்தை ரேவண்ணாவை போலீசார் கைது செய்துவிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவின் காவலில் இருக்கும் ரேவண்ணா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் அம்மா- முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவையும் விசாரணைக்கு அழைக்க இருக்கிறதாம் சிறப்பு புலனாய்வுக் குழு. இதனால் தேவ கவுடா குடும்பமே அதிர்ந்து உறைந்து போயிருக்கிறதாம்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க தயாராக உள்ளனராம். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் பிரஜ்வல், இந்தியா வருவதாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நாடு திரும்புவார்; மங்களூர் அல்லது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யலாம் என சிஐடி போலீசார் காத்திருந்து ஏமாந்து போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications