ஓட்டுக்கு பணம்! ரூ.3,000 கூப்பன் கொடுத்த காங்கிரஸ்? தோற்றுப்போன குமாரசாமி மகன் நிகில் பரபர புகார்
பெங்களூர்: கர்நாடகா தேர்தலில் மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் நள்ளிரவில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் கொடுத்து ஓட்டை வாங்கியதாக பரபரப்பாகவும், உருக்கமாகவும் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். தொங்கு சட்டசபை உருவாகும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் அதனை மீறி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மகன் நிகில் கவுடா ராமநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் குமாரசாமியின் மனைவியும், தனக்கு தாயுமான அனிதா எம்எல்ஏவாக இருந்த நிலையில் நிகில் கவுடா தோல்வியை தழுவினார்.
இந்த தொகுதியில் நிகில் 76,975 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் 87,690 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிகிலுக்கு இந்த தேர்தலிலும் தோல்வி கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் தனது தோல்விக்கான காரணம் குறித்த நிகில் கவுடா கூறியுள்ளார். சென்னப்பட்டணா தொகுதியில் தந்தை குமாரசாமி வெற்றி பெற்ற நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் நிகில் கவுடா கூறியதாவது:
ராமநகர் மாவட்டத்தில் சென்னப்பட்டணாவில் என் அப்பா மீது அதிகமானவர்கள் பிரியம் வைத்துள்ளனர். உங்களின் அன்பை கண்டு வியக்கிறேன். ராமநகர் தொகுதியில் நான் தோற்றிருந்தாலும் கூட என் மீது மக்கள் பாசம் காட்டினர். இந்த அன்புக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். நீங்கள் தான் எங்களின் குடும்பம்.
தேர்தல் வெற்றி தோல்வி ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதனால் வீட்டில் முடங்கி இருக்க மாட்டேன். கடந்த 2004ல் ராமநகர் தொகுதியில் அப்பா குமாரசாமி போட்டியிட்டார். அதன்பிறகு தொடர்ந்து ராமநகர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறார். மண்டியாவில் என்னை கடந்த முறை தோற்கடித்தனர். இப்போது ராமநகரில் தோற்கடித்துள்ளனர். நள்ளிரவில் காங்கிரஸ் கட்சியின் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடம் வழங்கி அவர்களை ஏமாற்றி என்னை தோற்கடித்துள்ளனர்.
வரும் நாட்களில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். மேலும் நான் எந்த காரணத்தை கொண்டும் ராமநகரை விட்டு வெளியேற மாட்டேன். மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன். தற்போதைய சூழலில் எதிர்கால அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எனது தாத்தா தேவகவுடா உருவாக்கி தந்தை குமாரசாமி வளர்த்த கட்சியை பலப்படுத்துவது பற்றி யோசித்து வருகிறேன். 2028 ல் ராமநகர் சட்டசபை தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவேன்'' என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications