கர்நாடக அரசியலில் திருப்பம்.. காங்., அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ் ஒருவழியாக திருப்தி எம்எல்ஏ ஆனார்
பெங்களூரு: திங்கட்கிழமை கர்நாடக சட்டமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு, காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் ஒருவரான எம்.டி.பி.நாகராஜ் ஒருவழியாக சமாதானமாகி காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க சம்மதித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இயங்க உள்ளதாக, எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜ் அறிவித்துள்ளார். தலைவர்கள் அனைவரும் ஒருசேர காங்கிரஸ் கட்சியிலேயே தம்மை தொடருமாறு கோரியதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது, மேலும் பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் மீண்டும் எங்கள் வசமாக்குவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களில் சிலர் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற சம்மதித்துள்ளதாக கூறப்பட்டது. இத்தகவல் அங்கு நிலவும் அரசியல் நெருக்கடியில் திடீர் திருப்பமாக கருதப்பட்டது இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான நாகராஜ் தற்போது சமாதானமாகியுள்ளார்.
கர்நாடக பேரவை நாளை மறுநாள் மீண்டும் கூட உள்ள நிலையில், பெங்களூருவில் துணை முதல்வர் பரமேஸ்வரா, அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெங்களூரு புறநகரில் வசிக்கும் அதிருப்தி எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜை அவரது வீட்டில் சந்தித்து ராஜினாமாவை திரும்ப பெறுமாறு அவர்கள் கோரினர். அவர்களின் சமாதானத்தை ஏற்ற நாகராஜ், ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.
Karnataka CM HD Kumaraswamy, rebel Congress MLA MTB Nagaraj, and Congress leader Zameer Ahmed Khan at the residence of Congress Legislature Party (CLP) leader Siddaramaiah's residence in Bengaluru pic.twitter.com/uIxlghJ44k
— ANI (@ANI) July 13, 2019
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினேன். மற்றொரு எம்எல்ஏ-வான சுதாகரிடமும் கலந்து ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறியுள்ளேன்.
மேலும் சுதாகரை சமாதானப்படுத்தி விட முடியும் என்று தாம் நம்புவதாகவும், நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் இல்லத்தில் வைத்து, அதிருப்தி எம்எல்ஏவான எம்.டி.பி.நாகராஜை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.
சித்தராமையாவின் வீட்டில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ஜமீர் அகமது கான் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர்கள் அனைவரும் நாகராஜை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications