காவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி
மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.
பெங்களூர்: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தியது.
இதில் மேகதாதுவிற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

மேகதாது தீர்மானம்
மேகதாதுவிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் வாசித்தார். அதில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு சரியாக தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறது.

அனுமதி
இது தொடர்பான மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதற்கு எதிராக நாம் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

கேள்விகள்
தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்த தீர்மானத்தின் மீதான கேள்விகளை உறுப்பினர்கள் கேட்கலாம். இதுகுறித்து சட்டசபை உறுப்பினர்கள் விவாதம் செய்யலாம். ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அரசு விளக்கம்
தமிழக அரசு ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானங்கள் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திடம் அணைகட்ட அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அதையும் கர்நாடக அரசு அதையும் மீறி இருக்கிறது.

அனுமதி
மத்திய அரசு இந்த திட்டத்தின் சோதனைக்கு அனுமதி வழங்கியதை தமிழக அரசு கண்டிக்கிறது. மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தீர்ப்பை மீறும் வகையில் இரண்டு அரசுகளும் செயல்பட்டு இருக்கிறது.

நிறைவேறியது
கர்நாடக அரசோ இல்லை அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ தமிழக அரசின் அனுமதி இன்று காவிரியில் எந்த கட்டுமானமும் செய்ய கூடாது. காவிரியில் மேகதாது அணைகட்ட முயல கூடாது. மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றினார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications