Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஎம்ஐ கட்டாத பெண்.. வீட்டுக்குள் புகுந்து கியாஸ் சிலிண்டரை தூக்கி.. அதிர வைத்த பைனான்ஸ் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் நிதி நிறுவனத்தின் தொல்லை காரணமாக பலர் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மைசூருவில் மாத தவணை செலுத்தாததால் வீட்டுக்குள் புகுந்து கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை பல கோடியை தாண்டும். அதேநேரம் இந்த கடனை திருப்பி செலுத்தும் அளவிற்கு சூழலில் இல்லாதவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவது, அசிங்கமான பேச்சுகள், மோசமான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மரியாதைக்குறைவாக நடத்தப்படுகிறார்கள். அதேநேரம் அவர்களின் வாழ்வாதாரங்களும் சில நேரங்களில் கடனுக்கு ஈடாக பிடுங்கப்படும் சம்பவங்களும் நடக்கிறது.

cylinder finance

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை நிதி நிறுவனத்தின் தொல்லையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், மைசூருவில் நிதி நிறுவனத்தில் மாத தொகை செலுத்தாததால் சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு டவுன் மகாதேவபுரா பிலிம்போர்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாகிதா என்பவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வாகிதா அப்பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு மாதந்தோறும் வட்டி, தவணை தொகை செலுத்தி வந்துள்ளாராம். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாத தவணை தொகை நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த வாரம் வாகிதா வீட்டிற்கு வந்து தவணை கேட்டுள்ளனர்.

அதற்கு கணவர் உடல் நிலை சரியில்லை. அடுத்த வாரம் தருகிறேன் என வாகிதா அவர்களிடம் கூறினாராம். ஆனால் சொன்னபடி வாகிதா பணத்தை தரவில்லையாம். இதனால் நேற்று காலை மீண்டும் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தொகையை வசூலிக்க வாகிதா வீட்டிற்கு சென்று கடன் தொகை கேட்டுள்ளனர். அதற்கு தற்போது பணம் இல்லை 2 நாட்கள் கழித்து தருகிறேன் என வாகிதா கூறினாராம்.

இதனால், கோபமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் வாகிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆத்திரத்துடன் வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்து சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்காக அந்த பகுதி மக்கள் கூட ஏன் என்று கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வாகிதா ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாத தொகை செலுத்தாததால் வீட்டுக்குள் புகுந்து தனியார் நிறுவன ஊழியர்கள் கியாஸ் சிலிண்டரை தூக்கி சென்ற சம்பவம் மைசூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+