4-வயது மகனை கொன்ற வழக்கு.. பெங்களூர் பெண் அதிகாரியின் கணவர் போலீசாரிடம் சொன்னது என்ன?
பெங்களூர்: கடந்த 5 வாரங்களாக மகனை பார்க்க சுசனா சேத் தனக்கு அனுமதி அளிக்கவில்லை என்று போலீஸ் முன்பாக விசாரணைக்கு ஆஜரான வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பெங்களூர் யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி சுசனா சேத் என்ற பெண் வசித்து வந்தார். தனியார் நிறுவன சிஇஒ -வாக இருந்த இவர் தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்குக் 4 வயதில் சின்மையை என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில், தனது மகனுடன் கோவாவுக்கு சென்ற சுசனா சேத், அங்குள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தனது மகனை கொலை செய்தார். மகனின் உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களுருக்கு வாடகைக்கு கார் பிடித்து புறப்பட்டு சென்றார். ஹோட்டலில் அறையை புக் செய்யும் போது மகனுடன் வந்தவர் செல்லும் போது தனியாக சென்றதும் அறையில் ரத்தகறை இருந்ததும் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது.
இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார், சுசானா சேத் சென்ற கார் டிரைவரை தொடர்பு கொண்டு சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா காவல் நிலையம் செல்லுமாறு கூறினர். அதன்படி காரை டிரைவரும் ஐமங்களா காவல் நிலையம் ஓட்டி சென்றார். பின்னர் போலீசார் காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது தான், சுசனா சேத் மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து பெங்களூரு கொண்டு செல்ல திட்டமிட்டது அம்பலமானது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசானாவை கைது செய்த போலீசார் அவை 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடக்கும் போது இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட் ரமணன் பெங்களூருக்கு விரைந்தார்.
அவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் வெங்கட் ரமணன் இன்று விசாரணைக்கு செல்லும் போது அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குவிந்து இருந்தனர். எனினும், செய்தியாளர்களிடம் பேச மறுத்த வெங்கட் ரமணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்" கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications