கசிந்த 1000 ஆபாச வீடியோக்கள்! பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் மீது பாலியல் புகார்! அதிரும் கர்நாடகா
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா ஹாசன் தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா எம்பி பெண்களுடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியானது. கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஒருவர் மகளிர் ஆணையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். அதாவது தேவகவுடாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒன்று முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் இளைய மகன் ஆவார். மூத்த மகன் பெயர் ரேவண்ணா. முன்னாள் அமைச்சரான இவரது மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா.

இந்நிலையில் தான் தற்போதைய லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். இதையடுத்து மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது தொகுதியில் தேர்தல் நெருங்கிய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. அதாவது பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் ஹாசன் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவியது. அதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வீடியோக்களும் இருந்தன.
மேலும் உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானதாகவும் கூறப்பட்டது. அதோடு மொத்தம் 1000 ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் பேசும் பொருளானது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்தது. இந்த வீடியோக்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கர்நாடகா மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கொலை மிரட்டல் விடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா அவரை எப்படி மிரட்டினார்? என்பது தொடர்பான விபரம் புகாரில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புகாரை கர்நாடகா மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி சார்பில் முதல்வர் சித்தராமையா மற்றும் மாில டிஜிபி அலோக் மோகன் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தொடர்ந்து தான் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க சித்தராமையா முடிவு செய்துள்ளார். இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரமாக்க உள்ளது. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்த வீடியோ விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications