தர்ஷன் மட்டும் என்ன ஸ்பெஷலா.. எங்களுக்கும் பீடி, சிகரெட் கொடுங்க.. கைதிகள் உண்ணாவிரதம்
பெங்களூர்: பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் புகை பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, பெல்காவியில் உள்ள ஹிந்தல்கா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்கு புகையிலைப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளனர்.
தர்ஷனுக்கு பெங்களூரு சிறைச்சாலையில் வழங்கப்பட்ட அதே வசதிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரி 500க்கும் மேற்பட்ட கைதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், காலை உணவு போலவே, மதிய உணவை புறக்கணிப்போம் என்று அவர்கள் மிரட்டினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கைதிகள் தண்டனை பெற்றவர்கள் இல்லை, விசாரணை கைதிகள்தான். அவர்களுக்கு வெளியில் இருந்து அல்லது வருகை தரும் நபர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று ஹிண்டல்கா சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
"முன்பு கைதிகள் வெளியில் இருந்து தங்கள் பழக்கத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர்; ஆனால், சிறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், இந்த வசதி நிறுத்தப்பட்டது," என்று அவர் கூறினார்.
பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தர்ஷன் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வெடித்துள்ளது. சிறைச்சாலையின் வளாகத்தில் தர்ஷன் சில ரவுடி கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருந்த வீடியோ மற்றும் படங்கள் போன வாரம் வெளியானது.
நடிகர் தர்ஷன் மற்றும் அவரது 9 கூட்டாளிகள், நடிகை பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் அனுப்பிய ரசிகர் எஸ். ரேணுகாஸ்வாமியை கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர்.
தர்ஷன் புகை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு 9 சிறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, தர்ஷன் பெல்லாரி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் சிறைச்சாலை அமைப்பில் சமத்துவமற்ற நடவடிக்கைகள் குறித்த பிரச்சினைகளை எடுத்துக்காட்டியது மற்றும் சர்ச்சையை உருவாக்கியது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications