RS Poll: காங். மேல செம்ம லவ்... அதான் ஓட்டுப் போட்டேன்.. குமாரசாமியை கதறவிட்ட ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.
பெங்களூர்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) எம்.எல்.ஏ. ஶ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டதாக பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த 4 இடங்களுக்கு மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக தரப்பில் 3; காங்கிரஸ்-2; ஜேடிஎஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது.
இதில் காங்கிரஸ் மீது ஜேடிஎஸ் சரமாரியாக குற்றம்சாட்டி வருகிறது. ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் வளைத்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கடுமையாக விமர்சித்தும் வருகிறார். ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களுக்கு சித்தராமையா பகிரங்கமாக வேண்டுகோள் கடிதமும் எழுதியிருந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கர்நாடகா ராஜ்யசபா தேர்தல் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் குமாரசாமியி ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு கட்சி மாறி ஓட்டுப் போட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. ஶ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் மீது எனக்கு பெரும் அன்பு இருக்கிறது; அதனால் நான் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தேன் என பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இதனால் கொந்தளித்துப் போன குமாரசாமி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தமது கட்சி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்க வேண்டிய காங்கிரஸும் ஜேடிஎஸ்ஸும் ராஜ்யசபா சீட்டுக்காக மோதிக் கொண்டிருப்பது பாஜகவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குமாரசாமி கொந்தளிப்பு
தமது கட்சி எம்.எல்.ஏ. கட்சி மாறி ஓட்டுப் போட்டது குறித்து குமாரசாமி கூறியதாவது: 2 எம்.எல்.ஏக்கள் ஜேடிஎஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடவில்லை. ஶ்ரீனிவாச கவுடா வெளிப்படையாகவே காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டேன் என்கிறார். காங்கிரஸ் தமது நிஜ முகத்தை காட்டிவிட்டது. காங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீம்.. நாட்டில் பாஜகவை வளரவிட்ட குற்றவாளியே காங்கிரஸ்தான் என்றார்.
-
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications