சசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு
பெங்களூர்: பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறையிலிருந்து வரும் 27ம் தேதி ரிலீசாக இருந்தார் சசிகலா. ஆனால் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதற்குரிய மருந்துகளும், மூச்சுத்திணறலுக்கு ஆக்சிஜன் மூலமாக வழங்கப்படும் சிகிச்சையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சசிகலா உடல்நிலை
தினந்தோறும் சசிகலா உடல்நிலை பற்றி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. ரத்த அழுத்தம் 130க்கு 80 என்ற அளவில் நார்மலாக இருக்கிறது.

3 லிட்டர் ஆக்சிஜன்
நாடித் துடிப்பு, 74 என்ற அளவுக்கு இருக்கிறது. இதுவும் நார்மல் தான். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. 3 லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 என்ற அளவுக்கு இருக்கிறது. இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.

நடக்கிறார்
சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது. நன்றாக உணர்கிறார். தனது சாப்பாட்டை அவரே சாப்பிடுகிறார். நல்லபடியாக உட்கார முடிகிறது. உதவியுடன் நடக்கிறார். வழிகாட்டு நெறிமுறைப்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை
நேற்று சசிகலா உடலில் சர்க்கரை அளவு 157 ஆக இருந்தது. இன்று அது 205 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே இன்சுலின் மூலம், சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications