சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்!
Recommended Video
பெங்களூரு: சசிகலா தண்டனை காலம் முழுவதையும் அனுபவித்த பிறகே விடுதலை ஆவார் என்றும் சிறை நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் கர்நாடக சிறைத்துறை இயக்குனர் என்.எஸ்.மெக்ரிக் கூறியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றம்
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார்.

2017 பிப்ரவரி
இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதில் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்த விடுவித்தது. ஆனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.

2.5 ஆண்டுகள் முடிந்தது
இதன்படி 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நன்னடத்தை விதிகள் மூலம் சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

சிறைத்துறை இயக்குனர்
இந்நிலையில் சசிகலா தண்டனை காலம் முழுவதையும் அனுபவித்த பிறகே விடுதலை ஆவார் என்றும் சிறை நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் கர்நாடக சிறைத்துறை இயக்குனர் என்.எஸ்.மெக்ரிக் கூறியுள்ளார்.

2021 பிப்ரவரி வரை
சசிகலா விரைவில் விடுதலை ஆகி வருவார் என எதிர்பார்த்த அமமுகவினர் வருத்தம் அடைந்துள்ளனர். தற்போது முழு தண்டனை காலத்தையும் சசிகலா அனுபவித்துவிட்டு வருவதாக இருந்தால் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வெளியே வர முடியும். எனவே அதுவரை வெளிவரும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications