பாகிஸ்தானுடன் மேட்சா? கர்நாடகாவில் பாக். கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!
பெங்களூர்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று ஆசிய கோப்பை போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்க கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியை எரித்து, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என பொதுமக்கள் முழக்கமிட்டிருக்கின்றனர்.
கர்நாடகா மட்டுமல்லாது, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. உத்தவ் சிவசேனா தலைவர் ஆனந்த் துபே, துபாயில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்தும்படி, சோனி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், "துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் 2025 இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியை நேரலையில் ஒளிபரப்புவதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறோம். இப்போட்டி இந்தியாவில் ஒளிபரப்பப்படக் கூடாது. உங்களிடமிருந்து விரைவான மற்றும் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறோம்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை பாகிஸ்தான் தொடுத்தது. இந்தியா இதனை வெற்றிகரமாக தடுத்தது.
ஒரு கட்டத்தில் சோர்வடைந்த பாகிஸ்தான் சர்வதேச அழுத்தம் காரணமாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தது. இந்நிலையில் இப்படி சண்டை போட்ட நாடுகளுடன் எதற்கு விளையாட வேண்டும் என்று வலதுசாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும், இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications