சித்தார்த்தாவின் ரிலாக்ஸ் வாக்கிங் கடைசியில் இறுதி நடையாக மாறிய சோகம்.. பரபரப்பு பின்னணி!
Recommended Video
பெங்களூர்: சித்தார்த்தா எப்போதாவது மனக்கவலை இருந்தால் அதை மறக்க காபி தோட்டத்தில் நடப்பாராம். அது போல்தான் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தின் மீதும் அவர் நடந்துள்ளார். இந்த நிலையில் அவர் மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணி வரை அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.

சந்தேகம்
அதன் பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் கார் இருக்கும் இடத்துக்கு திரும்பாததால் டிரைவர் ஆற்றுப் பாலத்துக்கு சென்று தேடியுள்ளார். அப்போது அவர் அங்கு இல்லாததை அடுத்து டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். போனில் யாருடனோ டென்ஷனாக பேசிய சித்தார்த்தா நடக்க வேண்டும் என சொல்லிய போது டிரைவருக்கு சந்தேகம் ஏற்படாதது ஏன் என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.

லாபம்
அதாவது காபி எஸ்டேட் உரிமையாளரின் மகனான சித்தார்த்தா, மெல்ல மெல்ல சிறு சிறு தொழில்களை தொடங்கி முன்னுக்கு வந்துள்ளார். அவர் 1996-ஆம் ஆண்டு காபி டே நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை தொடங்கும் அளவுக்கு நன்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

பின்பற்றுதல்
சித்தார்த்தா பெரும்பாலும் மனக் கவலை ஏதும் இருந்தால் தனது காபி எஸ்டேட்டில் நீண்ட தூரம் நடந்து செல்வாராம். மனக் கவலையின் போது மட்டுமல்ல ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுக்க யோசனை செய்யவும் அவர் இதே முறையைதான் பின்பற்றுவாராம்.

ஜீரணிக்க முடியவில்லை
அதனால்தான் ஆற்றுப்பாலத்தில் தன்னை இறக்கிவிடுமாறு சித்தார்த்தா கூறிய போது டிரைவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. ரிலாக்ஸுக்காக வாக்கிங் சென்ற சித்தார்த்தாவின் பயணம் இறுதி நடையாக மாறிய சோகத்தை அவரது நிறுவன ஊழியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications