நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த 3 இளம்பெண்கள்.. நீச்சல் தெரியாததால் பலியான சோகம்! மங்களூரில் ஷாக்
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே சோமேஸ்வரா உச்சில்லா பகுதி உள்ளது. கடற்கரை நகரமான இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருவது வழக்கம். இதனால், அங்கு ஏராளமான சொகுசு விடுதிகளும் அமைந்துள்ளன. இந்த சூழலில், நேற்று அங்குள்ள ரிசார்ட் ஒன்றுக்கு நிஷிதா (வயது 21), பார்வதி(20), கீர்த்தனா ( 21) ஆகிய மூன்று பெண்களும் வந்துள்ளனர்.

மைசூருவை சேர்ந்த மூன்று இளம்பெண்களும் தாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடிய போது, ஒரு பெண் 6 அடி ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி பெண் உயிருக்கு போராடியதால், அவரை காப்பாற்ற ஏனைய இருவரும் உள்ளே சென்றுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூன்று பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சில நிமிடங்களில் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடைபெற்றுள்ளதால் யாராலும் காப்பாற்றவும் முடியாமல் போனது என்று சொல்லப்படுகிறது. நீச்சல் குளத்தில் இறங்கும் முன்பாக தங்களது ஐபோன் கேமராவில் பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முன்னதாக மூன்று பெண்கள் நீச்சல் குளத்தில் உயிரிழந்ததை ரிசார்ட் உரிமையாளர் முதலில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் அளித்த தகவலை அடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், மூன்று பெண்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர். ரிசார்ட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications