பெங்களூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்.. சென்னை திரும்புகிறார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூர்- ஓசூர் சாலையில் உள்ள நாராயணா இருதாலயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

Minister Anbil Maheshs condition is stable, Bengaluru Narayana Hrudayalaya Hospital statement

லேசான மயக்கமும் அடைந்தார். இதையடுத்து அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் அமைச்சரை உடனடியாக காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷை சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அங்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலையை பரிசோதித்தனர்.

அதில் அமைச்சருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாலும், வயிற்றுவலியாலும் அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தனர். அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். இதனிடையே, சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு பெங்களூர் சென்றார். பெங்களூர் - ஓசூர் சாலையில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Minister Anbil Maheshs condition is stable, Bengaluru Narayana Hrudayalaya Hospital statement

அங்கு அவருக்கு, பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை குறித்து பெங்களூர் மருத்துவமனை இன்று காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக உள்ளது. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசன வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் கார் மூலமாக சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+