‛கடைக்குட்டி சிங்கம்' பட பாணியில் பத்திரிகை.. மாப்பிள்ளையின் பெயருக்கு பின்னால் பாருங்க.. கர்நாடகா டிரெண்ட்டே இதுதான்
பெங்களூர்: ‛‛ஏன் மச்சான்.. எல்லோருக்கும் பெயரையும், பட்டத்தையும் சேர்த்து போட்டு இருக்கீங்க.. தாய் மாமன் என் பெயரை மட்டும் மொட்டையாக போட்டு இருக்கீங்க..
டாக்டருக்கு எல்லாம் Drனு போட்டு இருக்கீங்க.. இன்ஜினியரிங் படித்தவங்களுக்கு எல்லாம் Erனு போட்டு இருக்கீங்க.. பிரிண்டிங் பிரஸ் வைச்சி நடத்துற வடிவேலு மச்சானுக்கு கூட பிரஸ்-னு கவுரவமாக போட்டு இருக்கீங்க.. விவசாயம் பண்ணுறவங்களுக்கு..

விவசாயினு போட்டு இருக்கலாம்லா?'' இது கடைக்குட்டி சிங்கம் படத்தில் ‛குணசிங்கம்' கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி பேசும் வசனம்.
விவசாயினு போடுங்க
அதோடு, ‛‛குணசிங்கம் விவசாயினு போடுங்க.. நல்ல கம்பீரமாக இருக்கும்.. நானும் மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எல்லா தொழிலுக்கும் ரிட்டையர்மென்ட் இருக்கு.. ஆனால் எங்க தொழிலுக்கு மட்டும் தான் ரிட்டையர்மென்ட் கிடையாது'' என்று விவசாயத்தையும், விவசாயிகளையும் பெருமைப்படுத்தி இருப்பார் நடிகர் கார்த்தி.
அதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி தனது பைக்கில் ‛விவசாயி' என பச்சை நிற போர்டு வைத்திருப்பார். இந்த திரைப்படம் பல விவசாயிகளையும் ஊக்கப்படுத்தியது. இதையடுத்து பலரும் பத்திரிகைகளில் விவசாயி என்றும், தங்களின் பைக், கார்களில் விவசாயி என்றும் எழுத தொடங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தான் கர்நாடகாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா இளைஞர்
கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரோ தாலுகா குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ் குமார். இவருக்கும் ஹர்ஷிதா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் நாளை (பிப்ரவரி 4) நடைபெற உள்ளது.
இதில் மணமகன் தேஜஸ்குமார் மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது திருமண பத்திரிகையில் தேஜஸ்குமார் (விவசாயி) ராயல் மெக் என்று அச்சடித்துள்ளார். இந்த பத்திரிகை தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்று வருகிறது.
பெயருக்கு பின்னால் விவசாயி
தற்போது விவசாயம் செய்யும் பலருக்கும் திருமணத்துக்கு பெண் கிடைப்பது இல்லை. ஆனால் தேஜஸ்குமார் தனது பத்திரிகையில் விவசாயி என்று அச்சிட்டுள்ளார்.இதுபற்றி தேஜஸ்குமார் கூறியதாவது:
‛‛நான் விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தன். நாங்கள் இப்போதும் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக எங்களின் குடும்பம் விவசாயம் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு திருமணம் செய்ய பெண் கொடுக்க கூடாது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இந்த எண்ணம் மறைய வேண்டும்.
விவசாயத்துக்கு வந்தது ஏன்?
ஏனென்றால் விவசாயிகளும் இப்போது கைநிறைய சம்பாதிக்கிறார்கள். விவசாயம் செய்து வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் நிம்மதி வேறு எந்த தொழிலும் கிடையாது. மனைவியை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றால் அது விவசாயிகளால் மட்டுமே சாத்தியமாகும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து நானும் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். ஆனால் அந்த பணியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. இதனால் விவசாயத்துக்கு வந்துவிட்டேன்.நானும் என் நண்பர்களும் விவசாயம் செய்கிறோம்.
விவசாய உபகரணங்களை விற்பனை செய்கிறோம். இப்போது எங்களுக்கு வசதியான வாழ்க்கையும் நிறைய வருமானமும் இருக்கிறது. விவசாயிகள் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை மக்களுக்குக் காட்டுவதே எனது திருமணத்தின் முக்கிய நோக்கம்.
நெட்டிசன்கள் பாராட்டு
நான் திருமணம் செய்துகொள்ளும் ஹர்ஷிதா, பி.காம் படித்துள்ளார். வேறு எந்த பணி செய்தாலும் ஒருநாள் ஓய்வு உண்டு. அதேபோல் பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உண்டும். மேலும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. ஆனால் விவசாயத்தில் அப்படி எதுவும் இல்லை. நிம்மதியான வாழ்க்கை வாழலாம்'' என்று கூறியுள்ளார்.
இவர்களின் இந்த பத்திரிகை தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் புதுமண ஜோடியான தேஜஸ்குமார் - ஹர்ஷிதாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications