கர்நாடகாவில் கட்டிடம் இடிந்து விபத்து.. சிக்கிய 70 பேர்.. மீட்கப்பட்ட 37 பேர்.. 2 பேர் பலி!
கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் இடிபாடுகளில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று மாலைதான் இந்த சம்பவம் நடந்தது. இன்னும் அங்கு மீட்பு பணிகள் இதனால் நடந்து வருகிறது. மொத்தம் 6 ஜேசிபி வாகனங்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இடிந்து விழுந்தது 6 மாடி கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது.
|
எப்போது
சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. நேற்று அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அப்போது ஊழியர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது.
|
எத்தனை பேர் மீட்பு
இடிபாடுகளுக்கு உள்ளே 70 மக்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை 37 பேர் மட்டுமே மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

தடை
மீட்கப்பட்ட சிலர் பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் பாலியாகி உள்ளனர். அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை செய்யப்படும்
இந்த இடிபாடு எதனால் நிகழ்ந்தது என்று இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை. இடிபாட்டிற்கான காரணத்தை ஆராய அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications