லோக்சபா தேர்தலில் நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் போட்டி? ஸ்கெட்ச் கர்நாடகாவில்!
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்யசபா எம்பிக்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் உள்ள நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை பாஜக களமிறக்க திட்டமிட்டுள்ளது. இருவரும் கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவலை பாஜக மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கி உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய நிதி அமைச்சராக உள்ளார். அதேபோல் ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் இருவரையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வைக்க அந்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இவர்கள் 2 பேரும் தற்போது வரை தேர்தல் அரசியலை எதிர்கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா எம்பியாகவே அரசியலில் பயணிக்கிறார். ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் தூதர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து ஓய்வுக்கு பிறகு பாஜகவில் இணைந்து ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இத்தகைய சூழலில் தான் இருவரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதுதவிர கர்நாடகாவில் உடுப்பி - சிக்கமகளூர், உத்தர கன்னடா, ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றிலும் இவர்கள் களமிறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் பாஜக தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான் முதல் முறையாக பாஜக மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷி (கர்நாடகாவில் தார்வார் எம்பி) அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛அவர்கள் (மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பெயரை குறிப்பிடாமல்) வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதற்கான வாய்ப்பு என்பது அதிகமானதாக அல்லது குறைவானதாக இருக்கலாம். இவர்கள் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்பது தெரியவில்லை.
இருவரும் கர்நாடகாவில் இருந்து போட்டியிடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் மாநிலங்களில் இருந்து போட்டியிடுவார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுபற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்'' என்றார். இதையடுத்து அவர்கள் பெங்களூர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரகலாத் ஜோஷி, ‛‛எதுவும் இறுதியாகாத பட்சத்தில் இந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும். நான் கூறியது என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பாஜக என்பது தேசிய கட்சி. இந்த விஷயத்தில் கட்சி மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications