பிரதமர் மோடியின் எஸ்கார்டு ஹெலிகாப்டர் புதை மண்ணில் சிக்கியது.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூரு:கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டருடன் பாதுகாப்புக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர் புதை மணலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்,

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இன்று ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்படருடன் பாதுகாப்புக்கு 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தன. தரையிரங்கும் போது தரை கடினமாக இல்லாதால் ஒரு ஹெலிகாப்படர் புதை மணலில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் எஸ்கார்ட் ஹெலிகாப்டர் சேறு நிறைந்த வயலில் சிக்கியது பாதுகாப்புப் பணியாளர்கள் செய்த சிறிய தவறுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

சிந்தனூர் ஹோசல்லி முகாம் ஹெலிபேடில் சிக்கிய ஹெலிகாப்டரை மீட்கும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் ஜேசிபி மூலம் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அந்த பகுதியினர் கூறுகையல், எஸ்கார்ட் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக நெல் வயலில் ஹெலிபேட் கட்டப்பட்டது. இருப்பினும், அந்த பகுதி இன்னும் ஈரமாக இருந்ததால், விமானத்தின் எடையை தாங்க முடியாமல் ஹெலிகாப்டர் புதை மணலில் சிக்கிவிட்டது என்று கூறுகிறார்கள்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications