வேலை கேட்டு முற்றுகையிட்ட தொழிலாளர்கள்.! வசைபாடி விரட்டியடித்த கர்நாடக முதல்வரால் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சிக்கு சென்ற குமாரசாமியை, தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராடினர். தன்னை முற்றுகையிட்ட தொழிலாளர்களை பார்த்து கோபமுற்ற குமாரசாமி, மோடிக்கு ஓட்டு போட்டு விட்டு என்னிடம் வந்து இப்போது வேலை கேட்கிறீர்களா என கடுமையாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரெய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில முதல்வர் குமாரசாமி, பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ஒய்டிபிஎஸ் மற்றும் துங்கபத்ரா அணை பகுதியில் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கையை குமாரசாமியிடம் தெரிவிக்க வந்தனர்.

அவர்களை குமாரசாமியிடம் நெருங்க விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், முதல்வர் குமாரசாமியை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸார், பேரிகேட் போட்டு தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அதனையும் தள்ளிக் கொண்டு முதல்வரை முற்றுகையிட தொழிலாளர்கள் முயன்றனர்.
நிலைமையை சமாளிக்க காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து குமாரசாமிக்கு எதிராக தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த குமாரசாமி ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பார்த்து, தேர்தலில் மட்டும் மோடிக்கு வாக்களிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் வந்து கேட்பீர்களா என்ன நியாயம் இது என ஆவேசமாக கத்தினார்.
நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் கரேகுட்டே கிராம நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். நான் பேருந்தில் செல்வதற்கு வழிவிடப் போகிறீர்களா இல்லை தடியடி நடத்த சொல்லட்டுமா என, தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசினார்.
குமாரசாமியின் இந்த மிரட்டல் பேச்சு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் துங்கபத்ரா அணை நிர்வாகம் எங்களை வேலையை விட்டு நீக்கி விட்டது. எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என கெஞ்சாத குறையாக குரல் எழுப்பினார்.
ஆனால் எதையுமே காதில் வாங்காத குமாரசாமி கோபமுடன் அடுத்த கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்க, கரேகுட்டே கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். ஒரு மாநில முதல்வரே தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளதற்கு, பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications