கர்நாடகாவில் யாருடன் கூட்டணி.. டுவிஸ்ட் கொடுத்த ஜேடிஎஸ்.. இப்போதே கிளம்பிய பரபரப்பு.. என்னாச்சு
பெங்களூர்: கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியிருக்கும் நிலையில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கிங் மேக்கராக வலம் வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனால், அந்த கட்சி எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. முடிவுகள் நாளைய தினமே அறிவிக்கப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.

பாஜக ஆளும் ஒரே தென் மாநிலம் கர்நாடகாதான் என்பதால் இந்த தேர்தலில் வென்று பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இது அப்படியே நடக்கும் பட்சத்தில் குமாரசாமி கிங் மேக்கராக வலம் வரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனால் தற்போதே ரிசார்ட் அரசியல் குறித்த பேச்சும், குமாரசாமி யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற பேச்ச்சுகளும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் வலம் வர தொடங்கிவிட்டன. இந்த நிலையில், குமாரசாமி சிங்கப்பூர் சென்று விட்ட நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தன்வீர் அகமது, கர்நாடகாவில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக முடிவை ஜேடிஎஸ் எடுத்து விட்டதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் எங்களை தொடர்புகொண்டு வருகின்றன. யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது. உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்துவோம். கர்நாடகம் மற்றும் கன்னடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட போகிற கட்சிகளுடன் நாங்கள் இணைவோம். எங்கள் ஆதரவு இன்றியாராலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று கூறியிருந்தார்.
ஆனால், தன்வீர் அகமது கூறியது போல முடிவு எதையும் எடுக்கவில்லை என்று ஜேடிஎஸ் கட்சி இன்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜேடிஎஸ் கட்சியின் மூத்த தலைவர் இப்ராகிம், "அவர் (தன்வீர் அகமது) எங்கள் கட்சியின் செய்தி தொடபாளர் கிடையாது. எங்கள் கட்சியின் உறுப்பினரும் இல்லை. நீண்ட காலத்திற்கு முன்பே எங்கள் கட்சியை விட்டு சென்று விட்டார். நாங்கள் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது போல தொங்கு சட்ட சபை அமையாது என்றும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க பாஜக ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி விடும் என அச்சப்பட்டு காங்கிரஸ் கட்சி தற்போதே ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications