குடியுரிமை சட்டம்: பெங்களூருவில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட போராட்டம்- என்ஆர்சியை புறக்கணிக்க முடிவு
பெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூரு ஈத்கா மைதானத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் என்.ஆர்.சிக்கான ஆவணங்களை சமர்பிக்கப் போவதில்லை எனவும் இப்போராட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. பெங்களூரூவில் ஈத்கா மைதானத்தில் 35 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில்.

என்.ஆர்.சி. புறக்கணிப்பு
ஈத்கா மைதானப் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகாந்த் செந்தில், என்.ஆர்.சி..கான எந்த ஆவணங்களையும் நாங்கள் தரப்போவது இல்லை. அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவை நாம் எடுத்திருக்கிறோம். இந்த அரசாங்கத்தின் முகத்தில்தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை வீசி எறிய வேண்டும்.

தடுப்பு முகாம் செல்ல தயார்
என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை புறக்கணிப்பேன். இதற்காக குடியுரிமை அற்றவர்களுக்கு என உருவாக்கப்படும் தடுப்பு முகாமில் அடைத்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

பாஜக சான்று தேவை இல்லை
இதில் பங்கேற்று பேசிய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் உறுப்பினர் மவுலானா தன்வீர் பீர் ஹஸ்மி, எங்களது குடியுரிமைக்காக பாஜகவிடம் இருந்து நாங்கள் சான்றிதழ் பெற வேண்டிய அவசிய்ம் இல்லை. நாங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்களிப்பு செய்தவர்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அப்படியான பங்களிப்பை செய்துவிடவில்லை என்றார்.

தேசத்தை நேசிப்பவர்கள்
சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், உங்கள் உடைகளையும் முகங்களையும் பார்க்கிறேன். இங்கே பொதுவான என் கண்ணில்படுவது எல்லாம் இந்த தேசத்தை நேசிக்கின்ற மக்களாகத்தான் இருக்கின்றீர்கள்.

எங்கள் தேர்வு
தேசப் பிரிவினையின் போது என்னைப் போன்றவர்கள் இந்தியாவிலேயே தங்குவது என ஒரே ஒரு வாய்ப்பைத்தான் தேர்வு செய்தோம். இத்தனைக்கும் உங்களது முன்னோர்களுக்கு பாகிஸ்தானுக்கு இடம்பெயருவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் உங்கள் முன்னோர்கள் மதச்சார்பற்ற இந்தியாவில்தான் இருப்போம் என இங்கேயே இருந்தனர்.

பாஜகவின் பெயரை மாற்ற வேண்டும்
பாஜகவைப் பொறுத்தவரை முகமது அலி ஜின்னாவின் இருநாட்டு கொள்கையை பின்பற்றுகிறது. அதனால் பாஜகவின் பெயரை பாரதிய ஜின்னா கட்சி என மாற்றம் செய்து கொள்ளலாம். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். நாடு முழுவதும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications