புதர் பகுதியில் நடந்த அக்கிரமம்.. உருகி வழிந்த காதல்.. கடைசியில் சாதி தீயில் சாம்பலான பெண்..!
காதலியை எரித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்
பெங்களூரு: சாதி தீயில் ஒரு படித்த இளம்பெண் எரிந்து சாம்பலாகி உள்ளார்.. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்.. 27 வயதாகிறது.. இவர் அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரில் படித்து வந்தார்..
அப்போது தானிஸ்வரி என்பவரை காதலித்தார்.. இருவருமே ஒரே பொறியியல் கல்லூரியில் ஒன்றாகவே படித்தவர்கள்..

தனி ரூம்
பொறியியல் படிப்பு முடித்த பிறகு, சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.. அங்கேயே ரூம் ஒன்றை எடுத்து தங்கி வேலையும் பார்த்து வருகிறார்.. தானிஸ்வரி கல்லூரி படிப்பு முடிந்ததுமே மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று, அவரும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து தனியாக ரூம் எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

காதலர்கள்
ஆளுக்கு ஒருபக்கம் தனியாக தங்கி வந்தபோதிலும், காதல் மட்டும் விடாமல் தொடர்ந்துள்ளது.. இருவருக்குமே வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால், அப்போது சந்தித்து பேசி வந்தனர்.. இந்நிலையில், தானிஸ்வரி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.. ஒரு நல்ல மாப்பிள்ளையை தானிஸ்வரியின் அப்பா அசோக் சர்மா தேடிமுடித்துவிட்டார்.. மகளுக்கும் இந்த விஷயத்தை சொல்லி, மாப்பிள்ளையை நேரில் பார்க்க கிளம்பி வர சொன்னார்..

விருப்பம்
இதையடுத்து வீட்டுக்கு சென்ற தானிஸ்வரி, சிவக்குமாரை பற்றியும், காதலை பற்றியும் சொல்லி, அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் சர்மாவும், மகளின் விருப்பத்திற்கு இணங்கினார்.. சிவகுமாரை நேரில் அழைத்து வர சொன்னார்.. அவரிடம் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.. இதைக்கேட்டு பூரித்து போன தானிஸ்வரி, சிவகுமாரிடம் விஷயத்தை சொல்லி, தன் அப்பாவிடம் அழைத்து சென்றார்..

சிவக்குமார்
உடனே தானிஸ்வரி அப்பாவும், சிவக்குமாரிடம் திருமண பேச்சை எடுத்துள்ளார்.. அப்போதுதான் அந்த குண்டை தூக்கி போட்டார் சிவக்குமார்.. "நான் வேற ஜாதி, தானிஸ்வரி வேறு சாதி.. எங்க வீட்டில் இந்த கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. வேற சாதி என்றாலே அவர்கள் இறந்து விடுவார்கள்... அதனால் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டு, ஊருக்கு திரும்பிவிட்டார். இதைக்கேட்டு தானிஸ்வரியும் அவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சம்மதம்
நான் சம்மதம் பெற்று வாங்கிவருகிறேன் என்று தன்னுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டு, பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்தார்.. கடந்த 16ம் தேதி சிவகுமாரை நேரில் சந்தித்தார்.. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்... ஆனால் சிவக்குமாரோ மறுப்பு தெரிவித்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த சிவகுமார், தானிஸ்வரியை, ஒரு புதர் பகுதிக்கு அழைத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளதாக தெரிகிறது..

தீக்காயம்
வலியில் அலறி துடித்துள்ளார் தானிஸ்வரி.. சத்தம் வருவதை கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, பிறகு தான் தானிஸ்வரியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அப்போதே 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.. எனினும் சிகிச்சை பலனின்றி தானிஸ்வரி இறந்துவிட்டார். இதுகுறித்து தானிஸ்வரியின் பெற்றோர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் தந்தனர்.. ஆனால் அதற்குள் சிவகுமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications