புதர் பகுதியில் நடந்த அக்கிரமம்.. உருகி வழிந்த காதல்.. கடைசியில் சாதி தீயில் சாம்பலான பெண்..!

காதலியை எரித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சாதி தீயில் ஒரு படித்த இளம்பெண் எரிந்து சாம்பலாகி உள்ளார்.. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்.. 27 வயதாகிறது.. இவர் அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரில் படித்து வந்தார்..

அப்போது தானிஸ்வரி என்பவரை காதலித்தார்.. இருவருமே ஒரே பொறியியல் கல்லூரியில் ஒன்றாகவே படித்தவர்கள்..

 தனி ரூம்

தனி ரூம்

பொறியியல் படிப்பு முடித்த பிறகு, சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.. அங்கேயே ரூம் ஒன்றை எடுத்து தங்கி வேலையும் பார்த்து வருகிறார்.. தானிஸ்வரி கல்லூரி படிப்பு முடிந்ததுமே மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று, அவரும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு வந்து தனியாக ரூம் எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

காதலர்கள்

காதலர்கள்

ஆளுக்கு ஒருபக்கம் தனியாக தங்கி வந்தபோதிலும், காதல் மட்டும் விடாமல் தொடர்ந்துள்ளது.. இருவருக்குமே வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால், அப்போது சந்தித்து பேசி வந்தனர்.. இந்நிலையில், தானிஸ்வரி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.. ஒரு நல்ல மாப்பிள்ளையை தானிஸ்வரியின் அப்பா அசோக் சர்மா தேடிமுடித்துவிட்டார்.. மகளுக்கும் இந்த விஷயத்தை சொல்லி, மாப்பிள்ளையை நேரில் பார்க்க கிளம்பி வர சொன்னார்..

 விருப்பம்

விருப்பம்

இதையடுத்து வீட்டுக்கு சென்ற தானிஸ்வரி, சிவக்குமாரை பற்றியும், காதலை பற்றியும் சொல்லி, அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் சர்மாவும், மகளின் விருப்பத்திற்கு இணங்கினார்.. சிவகுமாரை நேரில் அழைத்து வர சொன்னார்.. அவரிடம் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.. இதைக்கேட்டு பூரித்து போன தானிஸ்வரி, சிவகுமாரிடம் விஷயத்தை சொல்லி, தன் அப்பாவிடம் அழைத்து சென்றார்..

சிவக்குமார்

சிவக்குமார்

உடனே தானிஸ்வரி அப்பாவும், சிவக்குமாரிடம் திருமண பேச்சை எடுத்துள்ளார்.. அப்போதுதான் அந்த குண்டை தூக்கி போட்டார் சிவக்குமார்.. "நான் வேற ஜாதி, தானிஸ்வரி வேறு சாதி.. எங்க வீட்டில் இந்த கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. வேற சாதி என்றாலே அவர்கள் இறந்து விடுவார்கள்... அதனால் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டு, ஊருக்கு திரும்பிவிட்டார். இதைக்கேட்டு தானிஸ்வரியும் அவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சம்மதம்

சம்மதம்

நான் சம்மதம் பெற்று வாங்கிவருகிறேன் என்று தன்னுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டு, பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்தார்.. கடந்த 16ம் தேதி சிவகுமாரை நேரில் சந்தித்தார்.. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்... ஆனால் சிவக்குமாரோ மறுப்பு தெரிவித்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த சிவகுமார், தானிஸ்வரியை, ஒரு புதர் பகுதிக்கு அழைத்து சென்று, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளதாக தெரிகிறது..

தீக்காயம்

தீக்காயம்

வலியில் அலறி துடித்துள்ளார் தானிஸ்வரி.. சத்தம் வருவதை கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, பிறகு தான் தானிஸ்வரியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அப்போதே 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.. எனினும் சிகிச்சை பலனின்றி தானிஸ்வரி இறந்துவிட்டார். இதுகுறித்து தானிஸ்வரியின் பெற்றோர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் தந்தனர்.. ஆனால் அதற்குள் சிவகுமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+