பெங்களூரு லாக்டவுன் - மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறப்பு
பெங்களூரு: கொரோனாவை கட்டுப்படுத்த பெங்களூருவில் ஜூலை 14 முதல் ஜூலை 22 வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் கால 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு நகரத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து மீண்டும் ஒருவார கால லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது.

பெங்களூருவில் நாளை இரவு 8 மணி முதல் 22-ந் தேதி அதிகாலை 5 மணிவரை இந்த லாக்டவுன் அமலில் இருக்கும். இந்த லாக்டவுன் காலத்தில் எவை எவை திறந்திருக்கும்? எவையெல்லாம் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது.
லாக்டவுன் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை விதிக்கப்படும் என்பதையும் இந்த வழிகாட்டுதலில் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசின் லாக்டவுன் கட்டுப்பாடுகள்/ தளர்வுகள் அறிவிக்கை விவரம்:












Click it and Unblock the Notifications