யாருங்க இது? ரூ.1,622 கோடி சொத்துடன் தேர்தல் களத்தில் குதித்த சுயேட்சை வேட்பாளர்! அலறும் காங், பாஜக!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், வேட்பு மனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. இதில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். காரணம் அவரது சொத்து மதிப்பு.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால், முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு படையெடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

சிக்பேட்டை : இந்த தேர்தலில், பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்டு வந்த கே.ஜி.எப்.பாபு, தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் இறக்கி உள்ளார். அவர்களது பெயரில் 1,622 கோடி சொத்துகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டி உள்ளனர்.
இதனால், சாஜியா தரணம், கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள சாஜியா மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு ரூ.1,622 கோடி என்பது பாஜக, காங்கிரஸ் கட்சிகளையே புருவம் உயரச் செய்துள்ளது.
கேஜிஎஃப் பாபு மனைவி : ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள குடும்பத்தலைவியான சாஜியாதான் தற்போதைய சூழலில் கர்நாடகாவில் மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளராக களத்தில் நிற்கிறார். 37 வயதான சாஜியாவின் கணவரும் ரியல் எஸ்டேட் அதிபருமான கேஜிஎஃப் பாபு என்ற யூஷுப் ஷரிப் காங்கிரஸ் சார்பில் சிக்பேட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வந்தார்.
இதற்கிடையே தான் ஆயிரக்கணக்கான பேருடன் வந்து அமர்க்களமாக வேட்பு மனு தாக்கல் செய்தார் சாஜியா. தனது கணவர் கேஜிஎஃப் பாபுவுக்கு காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்தால், தனது வேட்பு மனுவை வாபஸ் பெறப்போவதாக கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் சார்பில் சிக்பேட்டை தொகுதி வேட்பாளராக தேவராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், கர்நாடகாவின் பணக்கார வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சாஜியா தரணம், சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை போட்டியிடுவாரா அல்லது வேட்பு மனுவை வாபஸ் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணக்கார வேட்பாளர்கள் : ஒசக்கோட்டை தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியிருக்கும் அம்மாநில அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், தனது சொத்து மதிப்பு 1,609 கோடி எனத் தெரிவித்துள்ளார். தனது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கனகபுரா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கும், தனது மனைவிக்கும் சேர்த்து 1,414 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications