உயர் ரக வாழைப்பழ தார் விலை கடும் சரிவு - விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லையில் உயர்ரக ஏத்தன் ரக வாழைத்தாரின் விலை கிலோ ரூ.18 ஆக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிஞ்சி, குனியூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சங்கரன்திரடு, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

சேரன்மகாதேவி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. 12 மாத பயிரான இவை குலை தள்ளி காய்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை கஷ்டப்பட வேண்டியது இருக்கும். அதன்பிறகு அறுவடை செய்து கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தற்போது கவலையில் மூழ்கியுள்ளனர்.
தை முதல் வாரம் ஏத்தன் ரக வாழைக்காய் ரூ.38க்கு விலை போனது. தற்போது சரி பாதி விலை வீழ்ச்சியடைந்து ரூ.18க்கு விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
ஒரு தார் ரூ.250 முதல் ரூ.300 வரை விலை போன நிலை மாறி ரூ.110 முதல் ரூ.140 வரையே விற்பனையாகிறது. இதற்கு வியாபாரிகள், புரோக்கர்கள் கூட்டணியே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லையில் கொள்முதல் செய்யப்படும் வாழைதார்கள் கேரளாவில் கொள்ளை லாபத்தில் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் வியாபாரிகளும், புரோக்கர்களும் அதிக பணம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications