வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையை முறைப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சகம் நாட்டின் முக்கியப் வங்கிகளுக்கு அவசரமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வங்கிகளால் வழங்கப்பட்ட 'கோல்ட் மெட்டல் லோன்' (Gold Metal Loan - GML) எனப்படும் தங்க உலோகக் கடன்கள் மற்றும் 'லோன் அகெய்ன்ஸ்ட் கோல்டு' (Loan against Gold) எனப்படும் தங்க நகை கடன்கள் குறித்த அனைத்துத் தரவுகளையும் உடனடியாகத் தங்களுக்குச் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கை, தங்கம் தொடர்பான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் வரவுள்ளதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பலத்த விவாதங்கள் கிளம்பியுள்ளன. இதில் கோல்டு மெட்டல் லோன் என்பது நகை கடைகள் தங்களுடைய வர்த்தகத்திற்காக தங்க கட்டிகளை கடனாக பெறும். Loan against Gold என்பது சாமானிய மக்கள் வாங்கும் தங்க நகை கடன், அதாவது நகையை அடமானமாக வைத்து பணத்தை பெறுவது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

வங்கிகளுக்கு பறந்த அவசரக் கடிதம்
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (DFS) கடந்த வெள்ளிக்கிழமை மாலை அனைத்து வணிக வங்கிகளுக்கும் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த உத்தரவில், வங்கிகள் வழங்கிய தங்க உலோகக் கடன்களின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் அளவு, கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சர்வதேசத் தங்கம் விநியோகஸ்தர்களின் விவரங்கள், வங்கிகளின் தற்போதைய தங்கக் கடன் போர்ட்ஃபோலியோ அளவு, அதற்காகப் பெறப்பட்ட பிணையங்களின் (Collateral) அளவு மற்றும் ஒட்டுமொத்தக் கடனாளிகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்து விவரங்களையும் வங்கிகள் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு உடன் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
சில வங்கிகளிடம் மாத வாரியான துல்லிய புள்ளிவிவரங்களும் கோரப்பட்டுள்ளன. நிதியமைச்சகத்தின் இந்த அதிரடிக்குச் முன்பு, இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) நடப்பு நிதியாண்டிற்கான தோராயமான தங்க உலோகக் கடன் தேவை குறித்த தோராய கணிப்பை வழங்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?
தங்க இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியதும், வெள்ளி இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்பு இத்தகைய நடவடிக்கையை எடுக்கப்பட்டு உள்ளது மூலம் மத்திய அரசு தங்கம் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அல்லது நடவடிக்கைகள் கொண்டு வரலாம் என்று வங்கித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பொதுவாகவே இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தங்க இறக்குமதி குறைவாக இருக்கும் காலம் என்பதால், இந்த நேரத்தில் புதிய வழிமுறைகளை கொண்டு வருவது சரியான நேரம் என்று சில வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்க இறக்குமதி வரி உயர்விற்குப் பிறகும் சந்தையில் நிலவும் சில ஓட்டைகளை அடைப்பதற்காகவே இந்த புதிய தரவு சேகரிப்புப் பணிகள் நடத்தப்படுவதாக மூத்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications