வரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது
டெல்லி: ஜிஎஸ்டி வரி செலுத்தியதில் ஏதேனும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பதைப் பற்றி ஆராய்வதற்காக அனைத்து விபரங்களையும் ஜிஎஸ்டி ஆணையத்திடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளது மத்திய வருமான வரித்துறை ஆணையம்.
இதோ 2017-18ம் நிதியாண்டு முடிந்து 2018-19ம் நிதியாண்டு ஆரம்பமாகிவிட்டது. கூடவே 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டது.
வர்த்தகர்களும், தொழில் துறையினரும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 9 மாதங்கள் முடிந்துவிட்டது. கடந்த 9 மாதங்களின் ஜிஎஸ்டி வரி வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் வசூலாகி உள்ளது. நேரடி வரி வருவாயில் ஜிஎஸ்டி வரி வருவாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததுள்ளது. இதனைப் பற்றிய அனைத்து தகவல்களும் வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளது.

வரி வசூல் எவ்வளவு
பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதே வரி வசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க காரணமாகும், கடந்த 2017-18ம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகள் வாரியத்திற்கு வரவேண்டிய வரி வசூலில், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட அளவை விட சுமார் 10.05 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி ஆணையம்
வருமான வரி வசூல் அதிகரித்து இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூலில் சில தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் முறைகேடு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முறைகேடு பற்றிய அனைத்து தரவுகளையும், தகவல்களையும் ஜிஎஸ்டி ஆணையம் நேரடி வரிகள் வாரியத்திற்கு (Central Board of Direct Taxes) அனுப்பி உள்ளது.

வருமான வரி ரிட்டன் தாக்கல்
நேரடி வரிகள் வாரியமும் (CBDT) சந்தேகத்திற்கு உட்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான அனைத்து விபரங்களையும் கேட்டுப் பெற்றுள்ளது. தொழில் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் அனைத்தும் பின்னர் 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் ரிட்டன்களிலும் இடம் பெற்று இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களும் தரவுகளும் வருமான வரித்துறையால் வரி அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.

வரி ஏய்ப்புக்கு அபராதம்
வரித் துறை அதிகாரிகளால் அனைத்து ஆவணங்களும் தரவுகளும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களிடம் இருந்து வரிகளுடன், அபராதமும் வட்டியிம் சேர்த்து வசூலிக்கப்படும் என்று நேரடி வரிகள் வாரிய உயர் அதிகாரிகளும், வரித்துறை வல்லுநர்களும்

கடும் தண்டனை
வாட் வரி விதிப்பு முறையில் வணிக வரித்துறைக்கும் வருமான வரித் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலை இருந்ததால், பெரும்பாலான நிறுவனங்கள் சரியான கொள்முதல், விற்பனை மற்றும் செலுத்தவேண்டிய வரிகள் போன்றவற்றை தெரிவிக்காமல் வருமான வரித்துறையை ஏமாற்றி வந்தன. ஆனால், தற்போது ஜிஎஸ்டி வரிகள் ஆணையமும் வருமான வரித்துறையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் வரி செலுத்தாமல் ஏமாற்றம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications