வருமான வரித்தாக்கலுக்கான காலக்கெடு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி: வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு தேதியை வரும் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
2016-17ம் ஆண்டுக்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரித்தாக்கலுக்கான கடைசி நாள் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாத காலம் காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையினர் நெருக்கடி
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர்.

ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்
கூடவே, ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கான படிவங்களை தாக்கல் செய்வதற்கான முஸ்தீபுகளில் அனைத்து தொழில் துறையினரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி
மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மேற்கொண்ட கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் 2 , ஜிஎஸ்டிஆர் 1 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகிய படிவங்களை தயார் செய்து அதையும் வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும், வரி ஆலோசகர்களும் தணிக்கையாளர்களும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்று அலைந்து கொண்டிருப்பதால், வருமான வரித்தாக்கல் செய்யவேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர்.

வருமான வரி தாக்கல்
எனவே, செப்டம்பர் 20ம் தேதிக்குள் அனைத்து ஜிஎஸ்டிஆர் படிவங்களை எல்லாம் தாக்கல் செய்துவிட்டு, மறுபடியும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அனைத்து விபரங்களையும் படிவங்களையும் தயார் செய்து தாக்கல் செய்வது என்பது முடியாத செயல் என்பது அனைவரும் அறிந்ததே.

அக்டோபர் 31 கடைசி நாள்
இதனை மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes) தெளிவாக உணர்ந்துள்ள காரணத்தினால், தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications