கேரளா வெள்ள பாதிப்பு: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கேரளாவில் பெருவெள்ளம் பாதிப்புகளால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும்’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்வது தாமதமானால் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

கடந்த மாதத்தில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வரித் துறை நீட்டிப்பு செய்திருந்ததை அடுத்து வரி செலுத்துபவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு 400 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருட்கள் பல மாநிலங்களில் இருந்தும் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என்றாலும், அப்பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணங்களை வெள்ளத்தில் தொலைத்த பலரும் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், பெரு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications