மோடியின் புது அறிவிப்பு... இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகுமாம்!
பிரதமர் மோடியின் புது அறிவிப்பினால் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மதிப்பீடு செய்துள்ளது.
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் 55 நாட்களுக்கும் மேலாக பணப்பஞ்சத்தில் மக்கள் தவித்து வந்தனர். ஆளும் பாஜக அரசு மீது பலரது கோபம் திரும்பியது. நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றியது போல டிசம்பர் 31ஆம் தேதியன்று பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றினார்.
அப்போது அவர் விவசாயிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி, வங்கிகளின் கடன்களுக்கான வட்டி குறைப்பு, வங்கிகளில் வீட்டுக்கடன்களுக்கான மானியம் போன்றவற்றை அறிவித்தார்

ரூ.3500 கோடி செலவு
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த விவசாயம், வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்களால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி செலவாகும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மதிப்பீடு செய்துள்ளது.

ரூ. 1000 கோடி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எக்கோராப் என்ற பெயரில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடி இரண்டு வீட்டு வசதித் திட்டங்களை அறிவித்திருந்தார். இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.1,000 கோடியாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குக்கு அரசு ரூ.6,000 செலுத்தும் திட்டம் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.1,200 கோடி செலவாகும்.

விவசாயிகளுக்கு ரூ. 1300 கோடி
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு செலவிட ஆண்டுக்கு ரூ.1,300 கோடி தேவைப்படும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான டெபாசிட் தொகைக்கு 10 வருடங்களுக்கு 8 சதவிகித வட்டி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான கால அளவு ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications