ஸ்நாப் டீலுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் கைகோர்க்கும் அஞ்சல் துறை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் கடிதப் போக்குவரத்து மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையும் ஆன்லைன் வர்த்தகத்தில் விரைவில் கால்பதிக்க உள்ளது.

பாரம்பரியம் மிக்க வாரணாசி புடவைகள் பிரபலமானவை. வாரணாசியில் நெய்யப்படும் ஆடைகளை ஆன்லைன் மூலம் நாடுமுழுவதும் விற்பனை செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறையுடன் ஸ்நாப் டீல் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் வாங்கப்படும் ஆடைகளை நெசவாளர்களிடம் பெற்று ஆர்டர் செய்பவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அஞ்சல்துறை மேற்கொள்ளும்.

Snapdeal, India Post partner to bring weavers and artisans online

இதுபோல் கைவினை கலைஞர்களின் பொருட்களும் விற்கப்படும். இதற்காக இந்தியா போஸ்ட் ஸ்டோரை ஸ்நாப்டீல் ஏற்படுத்த உள்ளது. இச்சேவையில் முதல் முயற்சியாக வாரணாசியில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பின்னர் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளிலும் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தபால் சேவையில் 1,54,866 அஞ்சலகங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+