Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எலி பொறி தெரியுமா.. அப்படிதான் இது.." உடைத்து பேசும் ஆனந்த் சீனிவாசன்! தப்பி தவறியும் சிக்கிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தக் காலத்தில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அதுவும் பல நேரங்களில் நாம் கிரெடிட் கார்டுகள் தரும் சலுகைகளுக்காகவே அவற்றைப் பயன்படுத்துகிறோம். உண்மையில் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது மட்டும் சலுகைகள் கிடைப்பது எப்படி! இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் எளிதாக விளக்குகிறார் இது குறித்து நாம் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் ஆன்லைனிலும் சரி, கடைகளிலும் சரி நாம் பொருட்களை வாங்கும் போது விநோதமான ஒரு நடைமுறையைச் சொல்கிறார்கள். அதாவது ரெடியாக பணம் கொடுத்தால் அல்லது டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) மூலம் பொருட்களை வாங்கினால் எந்தவொரு சலுகையும் இருக்காது. அதேநேரம் கடன் அட்டை அதாவது கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால் ஆயிரக்கணக்கில் சலுகைகளைத் தருவார்கள்.

What is the secret behind Credit card offers and EMI offers explains Anand Srinivasan

கிரெடிட் கார்டு

அட கை காசு உடனே போட தேவையில்லா.. மாதம் மாதம் மெல்லக் கட்டினால் போதும்.. இப்படி கடன் வாங்கினால் கூடுதல் சலுகையா என்று பலரும் அதையே விரும்புவார்கள். ஆனால் ஆனந்த் சீனிவாசன் தொடக்கம் முதலே கையில் காசு இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருபவர். இதுபோன்ற இஎம்ஐ-களுக்கு மட்டும் ஏன் ஆஃபர் வருகிறது என்பதை எளிமையாகப் புரியும் வகையில் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இது ரொம்பவே சிம்பிள்.. உங்களுக்கு வைக்கும் பொறி தான் அது. இப்போது கிரெட்டி கார்டு வாங்க அளவு இல்லை. இதனால் நீங்கள் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது ஒவ்வொரு கிரெட்டி கார்டை வாங்குவீர்கள். கிரெடிட் கார்டு இல்லாதவர்களையும் கிரெடிட் கார்டை வாங்க வைக்கவே இந்த சலுகைகளை அறிவிக்கிறார்கள்.

எலிக்கு வைக்கும் பொறி தான்

முன்பு ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்திற்கும் இதுபோலத் தான் ஒரு டை-அப் இருந்தது. இதுபோல ஒரு சலுகையைக் காட்டி நிறைய கிரெடிட் கார்டுகளை விற்பதே அவர்கள் திட்டம். இது எலிக்குப் பொறி வைப்பது போலத் தான். நிறையப் பேருக்கு கார்டு விற்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தே பல இளைஞர்கள் பல கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளனர். பெட்ரோல் போட ஒரு கார்டு, ஷாப்பிங் போக ஒரு கார்டு, சினிமா டிக்கெட் வாங்க ஒரு கிரெடிட் கார்டு என வகை வகையாக வைத்திருப்பார்கள். உங்களைக் கடனாளியாக மாற்ற ஒரு வழிதான் இது.

எச்சரிக்கை தேவை

நாளை திடீரென உங்களுக்கு எதாவது பணத் தேவை வந்தால் யோசிக்காமல் கிரெடிட் கார்டில் கடன் வாங்குவீர்கள். நான் கடனே வாங்க மாட்டேன்.. பக்காவே இருப்பேன் என்றால் நீங்கள் இந்த ரிஸ்க்கை எடுக்கலாம். ஆனால், உங்களைக் கடன் வாங்க ஃபோர்ஸ் செய்வதே இதுபோன்ற திட்டங்கள். நீங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை ஒரு நாள் தாமதமாகக் கட்டினால் கூட ரூ.500ஐ அபராதம் என வாங்கிவிடுவார்கள். இதில் கண்ணுக்கே தெரியாமல் பல கட்டணங்களும் இருக்கும். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கையில் வந்துவிட்டாலே நாம் நினைத்ததை எல்லாம் வாங்கத் தொடங்கிவிடுவோம். அதன் பிறகு கடன் கட்ட முடியவில்லை என்று தவிப்போம். ரூ.1000 பாக்கி வைத்தால் கூட அதற்கு அபராதம் என ரூ.2000ஐ உங்களிடம் இருந்து வசூலித்துவிடுவார்கள்" என்று அவர் எச்சரிக்கும் வகையில் அட்வைஸ் செய்தார்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+