பஞ்சாப் ஆளுநரை சந்தித்த பகவந்த்மான்.. - ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஆம் ஆத்மி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச்10ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
பஞ்சாபில் காங். மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி
டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பஞ்சாப் தேர்தலில் இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பகவந்த் மான்
பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வரும் மார்ச் 16ஆம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்ஹர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாடல் என்று சொல்லப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி தான் பஞ்சாபில் வெற்றி தேடி கொடுத்ததால், அதே மாதிரி ஒரு ஆட்சியை பஞ்சாபில் கொடுக்க திட்டமிட்டுள்ளார் பகவந்த் மான்.

ஆளுநர்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பகவந்த் மான் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது பஞ்சாப் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஆட்சி அமைக்க உரிமைகோரினார்.

அமைச்சர்கள்
இதற்கு முன்னதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து 17 கேபினட் அமைச்சர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்றும், மற்றவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தலைநகரில் இல்லாமல், தொகுதியில் பணியாற்ற வேண்டும் என பல உத்தரவுகளை கூறியுள்ளார் பகவந்த் மான்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications