தமிழ்நாடு வழியில் பஞ்சாப்- பல்கலைக் கழக வேந்தராக இனி முதல்வர்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில பல்கலைக் கழகங்களில் ஆளுநருக்கு பதில் இனி மாநில முதல்வர் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் மசோதா அம்மாநில சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. மேலும் பஞ்சாப் மாநிலத்துக்கான நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆளுநர்களே, மாநிலங்களின் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக பதவி வகிக்கின்றனர். இதனை பயன்படுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான ஒரு நிழல் அரசாங்கத்தை ஆளுநர்கள் நடத்த முனைகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக பேசு பொருளாக இருக்கிறது.

இதனையடுத்து அண்மையில் மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ஆளுநர்களுக்கு பதில் இனி வேந்தர்களாக மாநில முதல்வர்கள் பதவி வகிப்பர் என சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இதே போக்கை கையாண்டு வருவது சர்ச்சையாக நீடிக்கிறது. இதனால் தமிழ்நாடு சட்டசபையிலும் இதே போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும், பல்கலைக் கழக வேந்தராக இனி மாநில முதல்வர் பதவி வகிக்க வகை செய்யும் சட்டசம் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் பஞ்சாப் மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டியும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வழங்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications