ஐயய்யோ அவரா.. அவரு பயங்கரமான ஆளாச்சே.. அம்மாவுக்கு சோறு கூட தராதவர்.. சித்து மீது சகோதரி பரபர புகார்
சண்டிகர்: பெற்ற தாயை கைவிட்டு, அனாதையாக தாய் இறக்க காரணமாக இருந்த பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது புகார் தெரிவித்துள்ளார் அவரது சகோதரி.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தேர்தல் வேலைகளை செய்துவருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் சகோதரி சுமன் துர், அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சுமன் துர்
நவ்ஜோத் சிங் சித்துவின் மூத்த சகோதரி சுமன் துர். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சுமன் துர் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்துள்ளார். இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தினார். அப்போது, ''1986 -ம் ஆண்டு தந்தையின் மரணத்திற்குப் பிறகு, வயதான தாயை நவ்ஜோத் சிங் கைவிட்டார். அதன்பிறகு 1989-ம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற பெண்ணாக இறந்துபோனார்.

கொடூரமானவர்
அப்பாவின் சொத்து மற்றும் பென்ஷன் எதையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. நவ்ஜோத் சிங் மிகவும் கொடூரமானவர். பணத்துக்காக என்னுடைய அம்மாவை கொன்றுவிட்டார்'' என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும், சுமன் துர் கூறுகையில், ''நாங்கள் மிகவும் கடினமான காலங்களை பார்த்திருக்கிறோம். என் அம்மா நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் எதைக் கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஆதாரம்
என்னுடைய தாய் தந்தையைப் பிரிந்துவிட்டதாகக் கூறுகிறார். அதற்கான ஆதாரத்தைக் கேட்கிறேன்'' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுமன் துர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நவ்ஜோத் சித்துவைச் சந்திக்கச் சென்றதாகவும் ஆனால் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் சுமன் தெரிவித்துள்ளார். நவ்ஜோத்தை சந்திக்கவே பஞ்சாப் வந்ததாக அழுதுகொண்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

நீதி வேண்டும்
இந்நிலையில், "நவ்ஜோத் சிங் சித்துவைத் தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, நான் செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் என்னை போனில் பிளாக் செய்துவிட்டார். அவருடைய வேலைக்காரர்களும் கதவுகளைத் திறப்பதில்லை. என் அம்மாவுக்கு நீதி வேண்டும்.
எனக்கு 70 வயது, எங்கள் குடும்பத்தைப் பற்றிய இந்த விஷயங்களை பொதுவெளியில் சொல்வது மிகவும் கடினமானது" என்று சுமன் துர் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications