பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் ராகுல்- சவுண்டு விடும் சித்து!
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். ஆனாலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து தம்மையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்கிற நம்பிக்கையில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
Recommended Video
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு வரும் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
அதேநேரத்தில் டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சி அமைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றே கூறுகின்றன. ஆம் ஆத்மி கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகளாகும்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்டு பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி. ஆனால் காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாத அளவுக்கு உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது.

காங். முதல்வர் வேட்பாளர்?
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தாமே முதல்வர் வேட்பாளர் என்கிறார். ஆனால் 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருக்கும் நானே முதல்வர் வேட்பாளர் என அடம்பிடிக்கிறார் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து. இதனால் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இருந்து வருகிறது.

ராகுல் இன்று அறிவிப்பு
இதனிடையே பஞ்சாப் தேர்தலுக்காக லூதியானாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். லூதியானா பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரை ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுண்டு விடும் சித்து
மேலும் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்த நவ்ஜோத்சிங் சித்து, எனக்கு சுரங்கங்களோ மதுபான தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை. என்னுடைய பஞ்சாப் மாடல் என்பது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பஞ்சாப் மண்ணின் இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மாநிலத்தின் 2 முதல்வர்கள் மாபியாக்களை வளர்த்துவிட்டிருந்தனர். இவற்றையெல்லாம் நான் முடிவுக்கு கொண்டு வருவேன் என முதல்வர் வேட்பாளர் கனவுடன் நம்பிக்கையில் பேட்டி கொடுத்து வருகிறார்.
-
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications