பஞ்சாபில் விவசாயிகள் மறியல் போராட்டம்.. நூற்றுக்கணக்கான ரயில் சேவை பாதிப்பு!
சண்டிகர்: பஞ்சாபில் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்தததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். பஞ்சாப்பில் அண்மையில் கனமழை பெய்தது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் முழுவதும் 3 நாள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தின் அறிவித்தனர். அதன்படி நேற்று ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் டிராக்டரில் போராட்ட களத்துக்கு வந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். போலீசார் தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்காமல் தண்டாவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் செய்தனர். இதனால் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் பஞ்சாப்பில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று 2-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக ரயில் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தை மறித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications